Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

'காவல்' இயக்குனர் நாகேந்திரன் மாரடைப்பால் காலமானார் – திரையுலகில் அதிர்ச்சி

2015-ஆம் ஆண்டு வெளிவந்த 'காவல்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாகேந்திரன், திடீர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பல முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய நாகேந்திரன், விமல், சமுத்திரகனி, புன்னகை பூ கீதா உள்ளிட்டோர் நடித்த 'காவல்' திரைப்படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், வசூலில் வெற்றி பெற முடியவில்லை.

பின்னர் இயக்கத்தில் தொடரா இருந்தாலும், சினிமாவில் பிற பணிகளில் நாகேந்திரன் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். சமீபத்தில் நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்திலிருந்து திரையுலகம் மீளவில்லை எனும் நிலையில், நாகேந்திரனின் மறைவு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments