Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஐபிஎல் 2025: பிளேஆப்ஸ் நம்பிக்கையுடன் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்!

ஐபிஎல் 2025 தொடரின் 43வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 25) சென்னையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

போட்டியை முன்னிட்டு சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“அடுத்த 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப்ஸுக்கு செல்லும் நம்பிக்கை எங்களிடம் உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணி இப்படிப் பட்ட நிலையிலிருந்து எப்படி மீண்டு வென்றது என்பதை நாங்களும் முறைப்படுத்தி ஆய்வு செய்துள்ளோம். ஒரு வாய்ப்பாகவே நாம் எதிர்கொள்ளும் போட்டிகளைக் காண்கிறோம். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவோம்.

எனினும், பிளே ஆப்ஸுக்கு தகுதி பெற முடியாமல் போனால் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதிலும் எங்களுக்கு தெளிவு உள்ளது. முந்தைய IPL சீசன்களிலும் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கடந்துள்ளோம். அவை எங்களை பலப்படுத்தி, அடுத்த ஆண்டு சாம்பியனாக்கியுள்ளன.”

திறமையான அணியாக சிஎஸ்கே மீண்டும் தன்னை நிரூபிக்கத் தயாராக இருப்பதை பிளெமிங் உரையாடலில் உறுதியுடன் கூறினார். இன்றைய மோதல் ரசிகர்களை பரபரப்புக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments