தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 25) பரசூட் பயிற்சிக்காக புறப்பட்டு இருந்த ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்ததில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வைக்கிங் டிஎச்-6 டுவின் ஓட்டர் வகையைச் சேர்ந்த இந்த விமானம் ஹுவா ஹின் விமான நிலையத்திற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் இயந்திரத்தில் வெடிப்பு போன்ற சத்தம் கேட்டதாகவும், விமானி அவசரமாக தரையிறங்க முயற்சித்தும் அது தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடம் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ளது. விமானம் இரண்டாக உடைந்த நிலையில், சிதைவுகள் கடலில் பரவியுள்ளது. இந்த விமானத்தில் ஆறு பொலிஸார் பயணித்த நிலையில், ஐவர் உயிரிழந்தனர். ஒருவர் கடுமையாக காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
0 Comments